அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படும் வணக்கத்திற்குரிய ஃபுல்டன் ஷீன்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வணக்கத்திற்குரிய ஃபுல்டன் ஜே. ஷீன் அவர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 24, வியாழனன்று அமெரிக்காவில் உள்ள புனித லூயிஸ் நகரில் நடைபெறும் திருப்பலியின்போது அருளாளராக அறிவிக்கப்பட இருப்பதாகவும், இவ்விழாவிற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சார்பாக கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் தலைமை தாங்கவுள்ளார் எனவும் புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மறையுறையாளராகவும் ஊடக ஆளுமையாகவும் விளங்கிய ஆயர் ஷீன் அவர்கள், கடந்த 2012-ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் வணக்கத்திற்குரியவர் என்று அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரது பரிந்துரையால் நிகழ்ந்த ஓர் அருளடையாளத்தை அங்கீகரித்ததன் மூலம், இவரது புனிதர் பட்டத்திற்கான முக்கிய படி நிலையான "அருளாளர்" பட்டம் வழங்குவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டது.
1895-ஆம் ஆண்டு இல்லினாய்ஸில் பிறந்த ஷீன், "கத்தோலிக்க நேரம்" (The Catholic Hour) என்ற வானொலி நிகழ்ச்சி மற்றும் "வாழ்க்கை வாழத் தகுதியானது" (life is worth living) என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் இலட்சக்கணக்கான நேயர்களைக் கவர்ந்து மிகவும் புகழ்பெற்றவரானார். ரோசெஸ்டர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஷீன், 1979-ஆம் ஆண்டில் தனது 84-வது வயதில் இறைபதமடைந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்