தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
இலத்தீனில் செபமாலை
நிகழ்ச்சிகள் ஒலியோடை
ஆயர் Rolando José Álvarez Lagos ஆயர் Rolando José Álvarez Lagos  

விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிக்கராகுவா ஆயர் Rolando Álvarez

நிக்கராகுவா அரசுத்தலைவர் Daniel Ortega-வின் 15 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்தான் ஆயர் Álvarez

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 2022 முதல் அரசுத்தலைவர் Daniel Ortega மற்றும் அவரது மனைவி துணை அரசுத்தலைவர் Rosario Murillo-வின் சர்வாதிகாரத்தால் நிக்கராகுவாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயர் Rolando José Álvarez Lagos அவர்கள், ஆட்சிக்கு எதிராக சதி மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக CNA செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 10, இச்செவ்வாயன்று நடைபெற்ற விசாரணையில், இந்தச் செயல்பாட்டில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், Matagalpa மறைமாவட்டத்தின் ஆயரான Álvarez மீதான வழக்கு விசாரணைக்குப்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் CNA செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நீதித்துறையின் அறிக்கையின்படி, Managua குற்றவியல் மாவட்ட நீதிமன்றங்களில், குற்றவியல் நடவடிக்கையின் ஆரம்பக் கட்ட விசாரணை நடைபெற்றது, இதில் ஆயர் Álvarez தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை சிதைக்கும் வகையில் சதி குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார் என்றும், நிக்கராகுவா மாநிலத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் வழியாகப் தவறான செய்திகளைப் பரப்பினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 19, 2022 அதிகாலையில், நிக்கராகுவா காவல்துறை, Matagalpa மறைமாவட்டச் செயலர் அலுவலகத்தில் நுழைந்து, நிக்கராகுவா அரசுத்தலைவர் Daniel Ortega-வின் 15 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவரான ஆயர் Álvarez  கைது செய்தனர்.

வழக்கறிஞரும் புலனாய்வாளருமான Martha Patricia Molina, நிகரகுவாவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை Ortega-வின் சர்வாதிகாரத்தின் கைகளில் ஏறத்தாழ 400 தாக்குதல்களை சந்தித்துள்ளது என்று "நிக்கராகுவா: ஒரு துன்புறுத்தப்பட்ட திருஅவை (2018-2022)" என்ற தனது அறிக்கையில் கூறியுள்ளார். (CAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜனவரி 2023, 14:04
Prev
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Next
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930